குடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை… தப்பியோடிய தொழிலாளிக்கு போலீஸ் வலை…

 

குடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை… தப்பியோடிய தொழிலாளிக்கு போலீஸ் வலை…

கோவை

மேட்டுப்பாளையத்தில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டாவது மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அறிவொளி நகரில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி முருகேசன். இவர் முதல் மனைவி உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக பார்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், பார்வதியின் நடத்தையில் முருகேசன் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்திவிட்டு வந்து, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை… தப்பியோடிய தொழிலாளிக்கு போலீஸ் வலை…

இதேபோல் நேற்றிரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவர், பார்வதியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அவர், அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் பார்வதியை கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, முருகேசன் அங்கிருந்து தப்பியோடினார்.

சம்பவம் குறித்து அந்தபகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய முருகேசனை தேடி வருகின்றனர்.