×

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் சோதனை!

 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.