×

வீடு தீப்பற்றி எரிந்ததில் மாற்றுத்திறனாளி குழந்தை பலி! பைக்கில் எடுத்து சென்று இறுதிசடங்கு 

 

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் மாற்றுத்திறனாளி குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. நான்கு வயதான மாற்றுத்திறனாளி குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இரண்டு குழந்தைகள் எப்படியோ தப்பித்து வெளியே வந்துவிட மாற்றுத்திறனாளி குழந்தை மட்டும் தீயில் கருகி உயிரிழந்துள்ளது. தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் குழந்தை முழுமையாக எரிந்து போய் உள்ளது. அக்கம் பக்கத்தினரே தண்ணீரை கொண்டு இருக்கும் தீயை அனைத்து குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.