ஹத்ராஸ் சம்பவம் - பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை சந்தித்தார் ராகுல்
Jul 5, 2024, 08:05 IST
உ.பி. ஹத்ராஸில் மத போதகர் போலே பாபாவின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.
இன்று அதிகாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஹத்ராஸ் புறப்பட்ட நிலையில் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்தார் ராகுல்காந்தி.
கடந்த 2ம் தேதி நடந்த போலே பாபாவின் ஆன்மிகக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான நிலையில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.