×

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் - செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது

 

செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நாட்கள் முடங்கின. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. இதனால் பல முக்கிய விவாதங்களை நடத்த முடியாமல் போனது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செட்பம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி அறிவித்துள்ளார்.