×

புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து

 

மத்திய அமைச்சரவையில் இடம் பெறப்போகும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார்.


மத்திய அமைச்சராக பொறுப்பேற்கும் எம்பிகளுக்கு தேநீர் பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார். இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் நடைபெற்ற தேநீர் விருந்தில், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்த் சோனாவால், ஜிதேந்திர சிங், கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.வெர்மா, பங்கஜ் சவுத்ரி, சிவ்ராஜ் சிங் சவுகான், அன்னபூர்னா தேவி, அர்ஜுன் ராம் மேவால், சிந்தியா, மனோகர் லால் கட்டார், நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்துகொண்டனர்.