×

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்

 

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ஆம் தேதி தொடங்குகிறது . 18ம் தேதி தொடங்கும் சிறப்பு கூட்ட தொடரானது 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

வேலை வாய்ப்பின்மை,  பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும்,  மணிப்பூர் வன்முறை குறித்து பேச வேண்டும் என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.