×

அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு

 

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.

ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் உருவெடுத்தவர் வி.கே.பாண்டியன். சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்து அக்கட்சி ஆட்சியை பாஜகவிடம் இழந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நவீன் பட்நாயகிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இன்று வரை என் மூதாதையர்களின் சொத்துக்கள் தான் என் வசம் உள்ளது. நான் IAS சேரும்போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளது. பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு என்மீதான விமர்சனங்கள் காரணமாக இருந்திருந்தால் தொண்டர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.