×

ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் எந்தெந்த நோயெல்லாம் ஓடிப்போகும் தெரியுமா ?

 

பொதுவாக ஆவாரம் பூ நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடியது இந்த பதிவில் நாம் ஆவாரம் பூக்களை எப்படி பயன் படுத்தினால் நாம் என்ன நன்மையை நம் உடலுக்கு அடையலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலருக்கு காய்ச்சல் இருக்கும் .அப்போது ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.

2.சிலருக்கு பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது.

3.இந்த சிறுநீரக தொற்று  நோய் பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ ஜூசை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.

4.மேலும் ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது.

5.மேலும் ஆவாரம் பூக்களை வைத்து தேநீர் தயாரிக்கலாம் .இதற்கு இந்த பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார்.

6.இந்த ஆவாரம் பூ தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

7.மேலும் ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும்.

8.அதோடு ஆவாரம் பூ மூலம் வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும்.

9.சிலருக்கு கல்லீரல் நச்சு இருக்கும் .அவர்கள் ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும்.

10.மேலும் ஆவாரம் பூ மூலம் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.