×

எந்த வயதிலும் மல சிக்கல் இல்லாமல் வைக்கும் இந்த நீர்

 

பொதுவாக நம் உடலும் குடலும் சுத்தமாயிருக்க மலசிக்கல் இல்லாமல் இருப்பது அவசியம் .இந்த மலசிக்கலை தடுக்கவும் அந்த நோய் முற்றி மூலம் வராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக வயிற்றில் உள்ள உணவுகளின் செரிமானத்திற்கு தண்ணீர் தேவையாய் இருக்கிறது .

2.நமது உணவுக்கு பின் வெந்நீர் அருந்தும்போது உணவையும், கொழுப்பையும் நன்றாக  உடைத்து தருவதால் செரிமான மண்டலம் எளிதாக இயங்குகிறது.

3.இப்படி உணவு உடைக்கப்படுவதால் எவ்வித கொழுப்பும் வயிற்றில் தங்காமல் வெளியேறுவதால் வயிறு மற்றும் குடல் பகுதி சுத்தமாக இருக்கும்.

4.பொதுவாக நமக்கு மலச்சிக்கல் உடலில் நீர் வறட்சியால் மற்றும் கெட்ட உணவு பழக்கங்களால் ஏற்படுகிறது.

5.ஆகவே மலசிக்கல் இல்லாமலிருக்கவும் குடல் இயக்கத்தை சீராக்குவதற்கு காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சிறந்தது.

 6.அதனால் தினசரி காலையில் வெந்நீர் குடிப்பதால் அந்த நாள் முழுதும் எந்தவொரு செரிமான பிரச்சனைகளும் இல்லாமல் உணவு ஜீரணமாகிறது.

7.இந்த வெந்நீர் குடிப்பதன்  மூலம் மலச்சிக்கல்  மற்றும் அதன் விளைவுகள் தடுக்கப்படுகின்றன.

8.வெந்நீர் அருந்தும்போது உடல் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதன் மூலம் வியர்வை வெளியேறுகிறது. 9.வெளியேறும் வியர்வையின் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி இரத்த ஓட்டத்தை சுத்தம் செய்கிறது.

10.இந்த வியர்வை  மூலம் உடல் முழுவதும் சுத்தமாகிறது.