உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு முன்பாக இதை சாப்பிடுங்க
பொதுவாக தினம் கண்ட ஸ்னாக்ஸ் என்ற பெயரில் பிஸ்ஸா ,பர்கர் சாப்பிடுவதைவிட இந்த கடலையை உண்டால் பல நோய்கள் வரும் முன் தடுக்கலாம் .இந்த கடலையின் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1. தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.
2.பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் சுகர் கட்டுக்குள் இருக்கும் ,
3.வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.
4.ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.
5.இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.
6.வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும்.
7.உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒருகைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும்.