×

வெங்காயச் சாற்றை தலையில்  நன்கு மசாஜ் செய்ய எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 

பொதுவாக  இன்றைய வாழ்வியல் முறை  முடி உதிர்வு பிரச்சினைக்கு ஒரு காரணம் ஆகும் .இது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1.சரியான தூக்கமின்மை முதல் உணவு பழக்கம் வரை முடி உதிர்வுக்கு காரணமாக கூறலாம் .
2.இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையில் ஒன்றாகும்.  
3.மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், செயற்கை பொருட்கள், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றது.
 4.இதனை எளிதி்ல தீர்க்க வேண்டும் என்று நினைத்து நம்மில் பலர் சந்தையில் கிடைக்கும் கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பக்க விளைவுகளை தான் ஏற்படுமத்தும்.


5.இதற்கு சிறந்த தேர்வு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கை முறைகளே ஆகும்.
6.சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்திருக்கும் இதற்கு வெங்காயம் சிறந்த சிகிச்சை தரும் .
7.முடி உதிர்ந்து இருக்கும் இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தல் நல்ல பலனை கொடுக்கும் 8.வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும்,பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு முடியை அலச வேண்டும் .இதே போல் பூண்டும் நல்ல பலன் தரும்