×

உணவில் அடிக்கடி  கடல் பாசி சேர்த்து கொண்டால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 

பொதுவாக  கடலுக்கு அடியில் வளரும் கடல் பாசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது . இந்த கடல் பாசியால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

 1.கடல் பாசியில் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும் சத்துக்கள் அடங்கியுள்ளது

 2.சிலர் தைராய்டு கோளாறால் கருத்தரிக்க முடியாமல் இருப்பர் .


3.அவர்கள் கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருப்பதோடு கருவும் சீக்கிரம் உண்டாகும் .

 4.சிலர் கொலஸ்ட்ரால் பிரச்சினையால் நிறைய மாத்திரை எடுத்து கொள்வர் ,
5.அவர்கள் கடல் பாசியில் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்டிரால் குறைவதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும். மேலும் உடல் எடையை குறைக்க உதவும் .வயிறு பிரச்சினை வராமல் பாதுகாக்கும்
 
6.சர்க்கரை நோய் உள்ள சிலர் அது கட்டுக்குள் வராமல் அவஸ்த்தை படுவர் .
7.இப்படி நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் அடிக்கடி கடல்பாசியைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு நீரிழிவையும் கட்டுப்படுத்தி நம் ஆரோக்கியத்தை காக்கும்