×

பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் எந்த நோயிலிருந்து விடுதலை கிடைக்கும் தெரியுமா ?

 

பொதுவாக ஒருவரின் தலையில் பொடுகு தொல்லையிருந்தால் தலை அரித்து கொண்டேயிருக்கும் .மேலும் பொடுகு வெள்ளை துகளாக கொட்டும் .இந்த பொடுகு தொல்லைக்கு காரணம் ஒரு சத்து குறைவுதான் காரணம் .இந்த பொடுகு தொல்லைக்கு சில இயற்கை முறை சிகிச்சை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்

1.பொடுகு தொல்லையிருந்தால் சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கலாம்.

2.பொடுகு தொல்லையிருந்தால் பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

3.பொடுகு தொல்லையிருந்தால் வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கனும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது.

4.பொடுகு தொல்லையிருந்தால் வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

5.பொடுகு தொல்லையிருந்தால் அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

6.பொடுகு தொல்லையிருந்தால் வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.

7.பொடுகு தொல்லையிருந்தால் தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

8.பொடுகு தொல்லையிருந்தால் மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

9.வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து பின்பு குளிக்க பொடுகு தொல்லையிருந்தால் காணாமல் போகும் 

10.அடுத்து மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்