×

தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூச எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 

பொதுவாக நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து பூசி குளிப்பார்கள். இதனால் சருமம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது.

இந்த பதிவில் கஸ்தூரி மஞ்சளை குளியல் பொடியுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்த என்ன மருத்துவ பலன் கிடைக்கும் என்று நாம் இந்த பதிவில் காணலாம்

1.மாதவிடாய்க் காலங்களுக்கு முன் சில பெண்களுக்கு  முகத்தில் சிறு சிறு பருக்கள் அல்லது கட்டிகள் உருவாகக் கூடும்.

2.இந்த சிறு பருக்களை விரட்ட பகல் நேரங்களில் இல்லையென்றாலும் இரவு நேரங்களில் மஞ்சளைக் குழைத்து பூசி வந்தால் பருக்கள் வருவது தடைபடும்.

3.சிலருக்கு அம்மை, தழும்பு, கரும்புள்ளி போன்றவை இருக்கும் .இது மறைய மஞ்சளுடன் சோற்றுக்கற்றாழை நுங்கை (ஜெல்லை) குழைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் அவை மறைந்து சருமம் இயல்பாகும்.

4.சிலருக்கு சேற்றுப்புண், பாத எரிச்சல், பாத வெடிப்பு இருக்கும் .இது போன்றவை இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூசலாம். பாத வெடிப்புகள் நீங்கி பாதம் அழகாகும்.

5.சிலருக்கு சரும சுருக்கமிருக்கும் .இந்த சுருக்கத்தைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கும் மஞ்சள்,

6.இந்த மஞ்சள் எண்ணெய் வழிந்த முகத்தைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

7.சிலர் விலை மதிப்புள்ள க்ரீம்கள் பூசுவர் .இந்த க்ரீம்கள் செய்யவேண்டிய வேலையைப் பால், தேன் உடன் கலந்து பூசும் மஞ்சள் எளிதாக செய்து விடுகிறது.

8.தினமும் முகத்திற்கு மஞ்சளுடன் சிறிது கடலை மாவு மற்றும் பால் ஆடை சேர்த்து தடவி வந்தால் முகம் பள பளப்பதோடு முகத்தில் கருமை மற்றும் காயங்கள் நீங்கிவிடும்.

9.மஞ்சளை சிறிது எலும்பிச்சை சாறில் தேய்த்து முகத்தில் பருக்கள் உண்டாகும் இடத்தில் தடவினால் ஆரம்பத்திலேயே பருக்கள் உண்டாவதாகி தடுக்கலாம்.

10.மஞ்சளுடன் சிறிது வேப்பிலை அரைத்து தேய்த்தால் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.