×

ஒரு கிளாஸ் பாலுடன், நெய் கலந்து அருந்தி வருவது எந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?

 

பொதுவாக நெய் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது .மேலும் பாலுடன் நெய் சேரும்போது அதன் வீரியம் அதிகம் .எனவே இந்த பதிவில் பாலுடன் நெய் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் காணலாம்

1.சிலருக்கு செரிமானம் குறைவாய் இருக்கும் .அவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பாலுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து அருந்தி வருவது உடலின் செரிமான அமைப்பை மிகவும் பலப்படுத்தும்.

2.நெய் கலந்த பாலை நாம் தினமும் அருந்தும் போது அவை இரண்டும் நமது உடலின் வளர்சிதை மாற்ற அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

3.சிலருக்கு உடல் வலி இருக்கும் .அவர்கள் தினமும் இரவில் நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் பல  வலிகளிலிருந்து விடுபடலாம்.

4.சிலருக்கு மூட்டு வலியிருக்கும் .நெய்யானது செயல்பட்டு மூட்டு வலியினை குறைக்க உதவுகின்றது.

5.சிலர் உடல் மிகவும் மெலிந்து காணப்படுவர் .அப்படி காணப்படுகிறவர்கள், இந்த நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் விரைவில் உடல் எடையினைக் கூட்டி நலமுடன் வாழலாம்.

6.பாலூட்டும் தாய்மார்கள் இந்த நெய் கலந்த பாலினை தினமும் அருந்தி வர நல்ல பயனைக் கொடுக்கும்.

7.சிலர் எடை குறைக்க விரும்புவர் .இப்படி எடையைக் குறைக்க நெய் உதவியாக இருக்கிறது.

8.நெய் என்பது கொழுப்பு சத்தின் ஆரோக்கியமான மூலமாக இருக்கிறது.

9.எனவே நாம் எடையிழக்க வேண்டுமென்று அதை உணவில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை.