×

பாலில்  மிளகுத்தூள் , பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 

பொதுவாக இருமல் பிரச்சினை இருந்தால் அது அதிக தொல்லையை கொடுக்கும் .உதாரணமாக

இருமல் பிரச்சனை இருக்கும்போது, நீங்கள் எந்த வேலையும்  செய்ய முடியாது. இருமலில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை நாம்  பார்ப்போம்.

1.முதலில் ஒரு கிராம் கல்லு உப்பு மற்றும் 125 கிராம் தண்ணீரை கலந்து, அதை பாதியாக குறைக்கும் வரை கொதிக்க வைக்கவும்.

2. பின்னர் இந்த கொதித்த நீரினை காலையிலும் மாலையிலும் குடிப்பதால் இருமலில் இருந்து நிம்மதி கிடைக்கும்.

3.இருமலை குணமாக்க கல்லு உப்பினை ஒரு நகம் அளவிற்கு எடுத்து நெருப்பில் நன்கு சூடாக்கவும், உப்பு அடுக்கு சூடேறி சிவப்பு நிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.

4.பின்னர் ஒரு கோப்பை தண்ணீரில் அதனை இடவும். இந்த தண்ணீரை இரவில் தூங்குவதற்கு முன் பருகவும். இதன் மூலம் இருமலில் இருந்து விடுதலை  பெறலாம்.

5.தீராத வறட்டு இருமலுக்கு நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும்.

6.இருமல் தீர புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடுவதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்.

7.இருமல் தீர ஒரு பாத்திரத்தில் 15-20 கிராம் நெய் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை எடுத்து, குறைந்த தீயில் சூடாக்கி குளிரவிட்டு சுமார் 20 கிராம் சர்க்கரையுடன் சேர்த்து மிட்டாய் கலவை போன்று உருவாக்கவும்.

8.வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பண்டத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை, தொடர்ந்து இரண்டு-மூன்று நாட்களுக்கு உண்டுவந்தால் இருமல் நின்றுபோகும்.

9.இருமல் தீர நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து மூன்று நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் எப்பேர்ப்பட்ட இருமலும் வராமலே போகும்.