×

கமல்ஹாசனை சந்தித்து அரசியல் பேசிய சவுக்கு சங்கர்

 

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து அரசியல் பேசியுள்ளார் சவுக்கு சங்கர்.


யூடியூபில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மிகவும் பிரபலமானவர் சவுக்கு சங்கர். அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல் தொடர்ந்து சினிமா பிரபலங்களை கூட தாக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மை காலமாக அரசியலில் நடக்கப்போகும் சில விஷயங்களை முன்கூட்டியே ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பிவருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பேச தொடங்கிவிட்டன. ஆனால் கமல்ஹாசன் இதுவரை தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சவுக்கு சங்கர் இன்று சந்தித்துள்ளார். இதுகுறித்து சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து என் புத்தகத்தை பரிசளித்தேன். அரசியலும் பேசினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.