×

நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது!!

 

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.  இதனிடையே இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.   நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.