×

சென்னையில் முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் ரத்து!! 
 

 

சென்னையில் முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்தாகியுள்ளது. 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து டெல்லி, சீரடி, ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.