×

15 தமிழக மீனவர்கள் கைது

 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை  இலங்கை கடற்படை கைது செய்தது.

 எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.  காரைநகர் பகுதியில் மீன் பிடித்தபோது தமிழக மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.