×

18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்

 

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கூடுதல் ஆணையர்களாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கர்க் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தாம்பரம் காவல்துறையின் புதிய ஆணையராக அபின் தினேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை வடக்கு மண்டல காவல்துறை ஜியாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தெற்கு மண்டல காவல்துறை ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
  • சென்னையில் காவல்துறை தலைவர் அலுவலக ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னையில் காவல்துறை தலைமையாக ஏடிஜிபியாக வினித் தேவ் வான்கடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை வடக்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை தெற்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸ் ஏடிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சேலம் ஆணையராக இருந்த விஜயலட்சுமி, சென்னை ஆயுதப்படை பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்
  • சென்னை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு டிஜிபியாக ராஜீவ்குமார் நியமனம்
  • சென்னை ஆயுதப்படை ஐஜியாக இருந்த லட்சுமி, திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருப்பூர் காவல் ஆணையராக இருந்த பிரவீன் குமார் அபினபு, சேலம் மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.