சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
Jun 29, 2024, 09:32 IST
விருதுநகர் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிமருந்து கலவை செய்யும் போது விபத்து நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டாசு ஆலையில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.