×

விதிமீறலில் ஈடுபட்ட 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்! ரூ.18.76 லட்சம் அபராதம்

 

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


தீபாவளி பண்டிகை காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6,699 ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.  கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது. 1,223 ஆம்னி பேருந்துகள் பல்வேறு வீதி மீறலில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதி மீறலில் ஈடுபட்டதாக 8 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்டதாக 18 லட்சத்துக்கு 76,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ரூ.10. 70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் 6,699 பேருந்துகளில் ஆய்வு செய்ததில் 1223 பேருந்துகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தீபாவளியையொட்டி அரசுப் பேருந்துகளில் 5.66 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.