×

#ADMK பாஜக அமைச்சர் சோபாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.

 

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் காரணம் என்று பாஜக மத்திய அமைச்சர் கே. ஷோபா தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து எடப்பாடி கே பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் கே.ஷோபா அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம்.
இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.