×

“திமுக ஆட்சியை இழக்க நேரிடும்” – அண்ணாமலை எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , “கொரோனா அதிகமாக உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மக்களுடைய பாரம்பரிய பழக்கத்தையும், உணர்வுகளையும் மதிக்க கூடிய வகையில் தமிழகத்தை
 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , “கொரோனா அதிகமாக உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மக்களுடைய பாரம்பரிய பழக்கத்தையும், உணர்வுகளையும் மதிக்க கூடிய வகையில் தமிழகத்தை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுடன் கூடிய அனுமதியை அளிக்க வேண்டும். தமிழக அரசு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சூழல் தான் இருந்தது நான் ஒன்றை சொல்கிறேன்; விநாயகர் சக்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் பொறுப்பை விட்டுவிடுங்கள். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக விழாவை அவர்கள் நடத்திக் காட்டுவார்கள்.விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட அனுமதி கொடுப்பதற்கு நீங்கள் யார்? விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கும் அரசு , டாஸ்மாக் கடைகளை திறந்து வைப்பது ஏன்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.