தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை யதார்த்தமாகிவிட்டது- அண்ணாமலை

 
annamalai

போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடத்துவதில் தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Annamalai


இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சாதாரணமாகிவிட்டது. கிளாம்பாக்கத்தில் பேருந்திற்காக நின்றிருந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஒரு நல்ல மனிதரின் செயலால் பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். தமிழக பெண்கள் சாலையில் பாதுகாப்பாக நடமாட இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்கள்? தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை யதார்த்தமாக மாறிவிட்டது.