×

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு- வானதி சீனிவாசன் வரவேற்பு

 

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் 46%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.