×

திமுக ஆட்சிக்கு வந்தபின் பட்டியலின மக்களின் மீதான தாக்குதல் அதிகரிப்பு- வானதி சீனிவாசன்

 

திமுக ஆட்சிக்கு வந்த பின், பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சிக்கு வந்த பின், பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற் போல் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தனது  வீட்டில் வேலை செய்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை சிகரெட்டால் சூடு வைத்தும் அடித்தும் கொடுமைபடுத்திய செய்தி அதிர்ச்சியைஅளிக்கிறது. மேலும் தனது படிப்பிற்காக வேலை செய்த பெண்ணிற்கு ஊதியமும் சரியாக வழங்கப்படவில்லை.