×

கோயம்பேட்டிலிருந்து இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது
கோயம்பேட்டிலிருந்து இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது
 

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடங்களும்  கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன. ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.