×

7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு  

 

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  இன்றும் நாளையும்  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 30 மற்றும் 01.07.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02.07.2024 மற்றும் 03.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி,நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.