×

சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!

 

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் மாற்றம் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ராஜீவ் குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தீப்ராய் ரத்தோர் சென்னையில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலர் பயிற்சி அகாடமியின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.