கழிப்பிடத்தில் தங்கவைக்கப்பட்ட தொழிலாளர்கள்! அங்கேயே சமைத்து, சாப்பிட்டு, உறங்கிய கொடுமை
Aug 1, 2024, 19:00 IST

திருப்பூரில் துப்புரவு பணி செய்ய வந்த வடமாநில தொழிலாளர்களை கழிவறைக்குள் உள்ள தனி அறையில் தங்க வைத்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள பொதுகழிப்பிடத்தில் துப்புரவு பணியை செய்ய வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 4 பேரை கழிவறை உள்ளே இருக்கும் அறையில் தனியே தங்க வைத்துள்ளனர். அந்த இளைஞர்கள் கடந்த ஒரு மாதமாக அங்கேயே தங்கி உணவு சமைத்து, உண்டு பணி செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு நபர் உள்ளே சென்று எடுத்த வீடியோ, தற்பொழுது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.