×

#DMKManifesto2024 இன்று வெளியாகும் திமுகவின் தேர்தல் அறிக்கை.

 

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,சென்னை மாநகர மேயர் பிரியா, திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.இராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., நாகநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களை ஏற்பாடு செய்து பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கருத்துகளை நேரில் கேட்டறிந்தனர்.
இதில் அனைத்து மக்களும் பங்களிக்கும் வகையில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - DMKManifesto2024’ என்ற தலைப்பில் பரிந்துரைகளை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தக் குழுவினர் தயாரித்த தேர்தல் அறிக்கை இன்று (20.03.2024) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.