×


மாமன்னர் பூலித்தேவனின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி

 

விடுதலை போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 308வது பிறந்த நாளையொட்டி தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்ட பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக முதன்முதலில் வாள் சுழற்றி , கம்பீரக்குரலால் சுதந்திர வேட்கை எழுப்பி, வெள்ளையனே வெளியேறு என்று  வீரமுழக்கமிட்டு எண்ணற்ற வெற்றிகளை கண்டு, தன் இறுதி மூச்சு உள்ளவரை தாய்நாட்டிற்காக போரிட்டு ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கும் விடுதலைப்போரில் வழிகாட்டியாக திகழ்ந்த #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின்  308 வது பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.