அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை
Jul 3, 2024, 09:52 IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் சென்னையானது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி, சென்னை ஆகிய நான்கு கல்லுாரிகளை உள்ளடக்கியது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான காவல்துறை விசாரணையில் புரளி என தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கு நேற்று தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.