×

'தனித்து நிற்க வேண்டும் என்பது பேராசை'... செல்வப்பெருந்தகைக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு

 

"எத்தனை காலம் பிறரை சார்ந்து இருப்பது?"  என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “எவ்வளவு காலம் சார்ந்து இருக்கப்போகிறோம்?” என பேசினார். இதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடுத்த பதிலால் காங்கிரஸ் பொதுக் குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.