×

தமிழ்நாட்டில் பிப். 1 முதல் மதுபானங்கள் விலை உயர்கிறது

 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை பிப்ரவரி முதல் உயர்கிறது.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுபானங்களின்‌ மீதான கலால்‌ வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில்‌ மதுபானங்களின்‌ விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும்‌ நடுத்தர ரக மதுபானங்களின்‌ விலை ரூ.40/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள்‌ விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்‌, 650. மி.லி. அளவு கொண்ட ர்‌ வகைகளின்‌ விலை ரூ40/- உயர்த்தப்பட்டுள்ளது.  

மேற்கண்ட விலை உயர்வின்‌. அடிப்படையில்‌ 375 மி.லி. 750 மி.லி... 1000 மி.லி. கொள்ளளவுகளில்‌ விற்கப்படும்‌ மதுபான ரகங்களும்‌ மற்றும்‌ 325 மி.லி, 500 மி.லி. கொள்ளளவுகளில்‌ விற்கப்படும்‌ மீர்‌ வகைகளும்‌ அந்தந்த ரகத்திற்கும்‌ மற்றும்‌ கொள்ளளவுக்கும்‌ ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்‌ எனவும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.