×

 தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.120 உயர்வு..

 


சென்னையில் தொடர்ந்து தங்கம் விலை  உயர்ந்து வரும் நிலையில், இன்றும்  சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து வருகிறது.  தொடர்ந்து விலை உயர்வதும், திடீரென விலை குறைவதுமாக தங்கம் விலை போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது.  அந்தவகையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்தது.  தொடர்ந்து நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து  ஒரு கிராம் ரூ.5,530க்கும், ஒரு சவரன் ரூ.44,240க்கும் விற்பனையானது.

இதந்தொடர்ச்சியாக இன்றும்  சென்னையில்  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.  அதன்படி  22 கேரட் ஆபரணத் தங்கம்  கிராமுக்கு ரூ. 15  உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,545க்கும், ஒரு சவரன் ரூ.44,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல்  சில்லறை விற்பனையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி  ரூ.80.70 காசுகளுக்கு விற்பனையாகிறது.  தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.