×

அடக்குமுறையில் தமிழக கோவில்கள்...அச்சத்தில் ஊழியர்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

 

தமிழக கோவில்களில் அடக்குமுறை உணர்வு வெளிப்படுவதாகவும், ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கோவில்களில் ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நடத்த போலீசார் தடை விதிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.