×

விடுமுறை முடிந்து இன்று முதல் முழு அளவில் செயல்படுகிறது ஐகோர்ட்

 

ஒருமாத கால கோடை விடுமுறை முடிந்து இன்றுமுதல் முழு அளவில் செயல்படுகிறது சென்னை உயர் நீதிமன்றம். இன்றுமுதல் பொதுநல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது.

தமிழ்நாட்டில் நிலவிய கடும் வெப்பத்தினால் கடந்த மே 1 முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றதிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது வெயிலின் தாக்கம் குறைந்ததால் ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் முழு அளவில் இயங்குகிறது.