×

‘மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை’... இளையராஜா திடீர் வீடியோ

 

இசை பெரியதா? பாடல் பெரியதா என சமூக வலைதளங்களில் சமீபத்தில் விவாதம் எழுந்துள்ள நிலையில் மற்றவர்களை கவனிப்பது எனது வேலை இல்லை என சூசகமாக வீடியோ வெளியிட்டு இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். 

இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “35 நாட்களில் முழுமையான ஒரு சிம்பொனி ஒன்றை எழுதியுள்ளேன். எனக்கு இது மிகவும் சந்தோஷமான விஷயம். திரைப்பட இசையோ, பின்னணி இசையின் பாதிப்போ இன்றி சுத்தமான சிம்பொனியாக இதை எழுதியுள்ளேன். என்னை பற்றி பேசப்படும் விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது எனது வேலை இல்லை. என்னுடை வேலையை கவனிப்பதுதான் எனது வேலை. என் வழியில் நான் தெளிவாக பயணித்துக்கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.