வரும் 23ம் தேதி உண்ணாவிரத போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

வரும் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.


கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு இன்றுவரை நிறைவேற்ற மறுத்துவருகிறது. சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், அரசுப் பணியாளா்களின் பணிக் காலத்தைப் பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாதப் பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30% க்கும் மேலாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட அரசு ஊழியா்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளையும்  திமுக அரசு நிறைவேற்றவில்லை. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். தமிழக பட்ஜெட்டில் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.