×

செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ 

 

நாடு முழுவதும் செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம். 

5G பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களையும் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.189 ஆகவும், ரூ.399 கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு ரூ.299 என்ற மாதந்திர கட்டணம் ரூ.349 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான ரூ.666 மதிப்புள்ள ப்ளான் ரூ.799 ஆக உயர்ந்துள்ளது. மாதம், இரு மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.