×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி நிறைவு விழா - அமைச்சர் பங்கேற்பு

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிறைவு விழாவில்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு நினைவு பரிசுகள் வழங்கினார்.

சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO- 2024) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் (26.01.2024) அன்று தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் நிறைவு விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.