×

”நீங்கள்நலமா” திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

 

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நீங்கள்நலமா திட்டத்தின் கீழ் மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் வாயிலாக பயனாளிகளை  தொடர்பு கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க "நீங்கள் நலமா" திட்டத்தின் கீழ், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், இன்று (06.03.2024) சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் வாயிலாக பயனாளிகளை தொடர்பு கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் பொது மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வழங்கப்பட்டு வரும் சேவைகள் உரிய முறையில் அவர்களிடம் சென்றடைந்துள்ளதா என்பது கருத்துக்களைக் கேட்டறிந்தார்.