×

நிலவில் இந்தியா- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

உலகளவில் நிலவில் கால் பதிக்கும் 4-வது நாடு என்ற பெருமையை பெற்று மகத்தான சாதனையை இந்தியா படைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. நிலவில் இந்தியா கால் பதித்திருப்பதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியது. உலகளவில் நிலவில் கால் பதிக்கும் 4-வது நாடு என்ற பெருமையை பெற்று மகத்தான சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்நிகழ்வுக்காக அயராத முயற்சி செய்த குழுவிற்கு பாராட்டுகள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.