×

விஜயகாந்த்துக்கு பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல் என்று அஞ்சலி செலுத்துவோம்- நிர்மலா சீ்தாராமன்

 

விஜயகாந்த்தை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும், முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். நடிப்பிலும் முத்திரை பதித்து, நடிகர் சங்கத்திலும் ஆளுமையுடன் செயலாற்றிய விஜயகாந்த், அரசியலிலும் கால்பதித்து, அரசியல் பயணத்திலும் தனக்கென தனிபாணியை உருவாக்கி மக்கள் மனங்களை வென்றார். மிகக் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். எளிய மக்களுக்கு அன்பின் உருவமாக, கருணையின் வடிவமாக இருந்த விஜயகாந்த்  மரணம் தேமுதிகவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.