×

இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் ‘இந்தியா' கூட்டணியின் வெற்றிக்கு ஒரு நல்ல அறிகுறி- ப.சிதம்பரம்

 

உத்தரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றார். இதேபோல் காங்கிரஸும்,  மேற்கு வங்கத்தில் ஆளும் திரினாமுல் காங்கிரசூம் வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்ட்டில் ஆளும் ஜே.எம்.எம். வெற்றி பெற்றுள்ளது. திரிபுராவின் 2 தொகுதிகளிலும், உத்தரகாண்டிலும் பாஜக வெற்றியை பதித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “ஜி20 உச்சி மாநாட்டிற்கு தலைவர்களின் வருகை அல்ல இன்றைய செய்தி,  இன்று அறிவிக்கப்பட்ட 7 இடைத்தேர்தல்களின் முடிவுதான் முக்கிய செய்தி. இந்தியா கூட்டணி 4:3 என்ற கணக்கில் பாஜகவை வீழ்த்தியுள்ளது. திரிபுராவில் 2 இடங்களிலும் உத்தராகண்டில் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கேரளா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அதீத பெரும்பான்மையுடன் ஆளும் கட்சியாக உள்ளது. பாஜகவும் அதன் பணபலமும் தோற்கடிக்க முடியாதவை அல்ல, பாஜகவின் கோட்டையில் கூட வீழ்த்த முடியும் என்பதை இந்தியா கூட்டணி நிரூபித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.