ஆச்சரியத்தில் மக்கள்! 7 கோடிக்கு ஏலம்போன 'பேய் புத்தகம்'..!
Jul 6, 2024, 05:30 IST
Frankenstein: Or, The Modern Prometheus’ என்ற இந்தப் புத்தகம் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லியால் எழுதப்பட்டு 1818ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.
பேய் புத்தகம் என்று கூறப்படும் இதை வானத்திலிருப்பவர்கள் பலரும் படிப்பதாக ஒரு நம்பிக்கையுண்டு.இந்தப் புத்தகத்தில் ஃபிராங்கன்ஸ்டைன் என்ற கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும் ஒன்றாகக் காணப்படுகிறது.
இளஞ்சிவப்பு நிறம் கொண்ட இந்த புத்தகத்தின் முதல் பிரதிகளில் இன்னும் 3 மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்று தான் தற்சமயம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு நிற அட்டை கொண்ட இந்த 3 பிரதிகளில் ஒரு பிரதி மட்டுமே தனியார் சேகரிப்பில் இருந்து தற்போது ஏலத்தில் விடப்பட்டது. மற்ற 2 பிரதிகள் நியூயார்க் பொது நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.